101. பத்துக் கற்பனைகள்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

மோட்சத்தை அடைகிறதற்கு வேத சத்தியங்களை விசுவசிக்கிறதல்லாமல் இன்னும் செய்ய வேண்டியது: சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்துப் பாவத்தைத் தள்ளிப் புண்ணியத் தைச் செய்யவும் வேண்டியது.

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த தேவகற்பனைகள் பத்து.

1-வது.--உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.

2-வது.--சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.

3-வது.--சர்வேசுரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.

4-வது.--பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.

5-வது.--கொலை செய்யாதிருப்பாயாக.

6-வது.--மோகபாவம் செய்யாதிருப்பாயாக.

7-வது.--களவு செய்யாதிருப்பாயாக.

8-வது.--பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

9-வது.--பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.

10-வது.--பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.

இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்.

1-வது.--எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.

2-வது.--தன்னைத்தானே நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது. --ஆமென்.

கருத்துகள்